sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சதி செய்தவன் குடும்பம் விளங்காது சாபம் விட்டார் செல்லுார் ராஜூ

/

சதி செய்தவன் குடும்பம் விளங்காது சாபம் விட்டார் செல்லுார் ராஜூ

சதி செய்தவன் குடும்பம் விளங்காது சாபம் விட்டார் செல்லுார் ராஜூ

சதி செய்தவன் குடும்பம் விளங்காது சாபம் விட்டார் செல்லுார் ராஜூ

1


ADDED : அக் 02, 2025 03:16 AM

Google News

ADDED : அக் 02, 2025 03:16 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''கரூர் சம்பவத்தில் உயிர்ப்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சாபம் விட்டார்.

அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் அவர் புதுமுகம். ஆளாளுக்கு விமர்சிக்கிறார்கள். அதிகமாகவும் விமர்சித்து விட்டார்கள். கரூரில் கேட்ட இடத்தை அரசு கொடுக்கவில்லை. பத்தாயிரம் பேர் கூடும் இடத்தில் 27 ஆயிரம் பேர் கூடினர். அங்கு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது வருத்தமாக உள்ளது. த.வெ.க., தலைவர் விஜய் மாவட்டம் தோறும் பஸ்சில் செல்லாமல் தொகுதி வாரியாக செல்ல வேண்டும்.

கரூரில் பெண்களும் குழந்தைகளும் இறந்தது வயிற்றெரிச்சலை தருகிறது. உயிர்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பம் விளங்காது. இந்த நேரத்தில் விஜயை விமர்சிப்பது சரியாக இருக்காது. ஒரு தலைவராக அவர் தன் ஆதங்கத்தை வீடியோவில் சொல்லி இருக்கிறார்.

கரூரில் அதே இடத்தில் பழனிசாமி பிரசாரத்திற்கு அனுமதி கேட்டபோது கூட்ட நெரிசல் ஏற்படும் என அனுமதி மறுத்து பிறகு அனுமதி கொடுத்தனர். அதேபோல த.வெ.க.,வினர் கேட்டபோது உயிர்பலி ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்து வேறு அகலமான இடத்தை கொடுத்திருக்க வேண்டும். விஜயால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காலதாமதமாக வந்துள்ளார். சம்பவம் நடந்த உடன் உடனுக்குடனாக விசாரிக்க நீதியரசரை தி.மு.க., அரசு நியமித்தது. அது எப்படி நடந்தது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us