sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது

/

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது


ADDED : ஏப் 23, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ஹிந்து மதம் பற்றி அவதுாறாக பேசிய தமிழக அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்கு பதிய உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.

மதுரை பிரவீன்குமார் தாக்கல் செய்த மனு:

தமிழக அமைச்சர் பொன்முடி ஏப்.5 ல் சென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஹிந்து மதம் மற்றும் பெண்கள் பற்றி அவதுாறாக, ஆபாசமாக பேசினார்.

அமைச்சர் என்பதை மறந்து நாகரீகமற்ற முறையில் மத ரீதியான பிரச்னையை உருவாக்கும் நோக்கில் பேசியுள்ளார். பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை போலீஸ் கமிஷனர், புதுார் போலீசாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி பி.தனபால் விசாரித்தார். புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி விசாரணையை போலீசார் முடித்துவிட்டனர்,' என அரசு தரப்பு கூறியது.

இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சட்டத்திற்குட்பட்டு உரிய முறையில் நிவாரணம் தேடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது,'என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us