/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகைக்கு தீபம் ஏற்றலாம்; அனுமதி அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ----------------------------------------------- திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகைக்கு தீபம் ஏற்றலாம்; அனுமதி அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ----------------------------------------------- திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகைக்கு தீபம் ஏற்றலாம்; அனுமதி அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ----------------------------------------------- திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகைக்கு தீபம் ஏற்றலாம்; அனுமதி அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ----------------------------------------------- திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 02, 2025 04:51 AM
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு:
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா டிச.,3 ல் நடைபெற உள்ளது. உயர்நீதிமன்றத்தின் 1996 உத்தரவின் அடிப்படையில் டிச.,3ல் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யுமாறு கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள (தர்காவிலிருந்து 15 மீ.,தொலைவில்) தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு சட்ட ரீதியாக தடை இல்லை. இது 1920 ல் பிரிவி கவுன்சில் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பழமையான தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக, மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பழமையான தீபத்துாணை கோயில் நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது. இது பாரம்பரிய இடத்தில் பக்தர்கள் மத சடங்குகளை செய்வதை தடுக்கும் நோக்கத்தை குறிக்கிறது. அம்முடிவு சட்ட விரோதமானது. ரத்து செய்ய வேண்டும். மலை உச்சியிலுள்ள பழமையான தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல் பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள மதுரை சோலை கண்ணன், திருவண்ணாமலை அரங்கநாதன் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மதுரை கனகவேல் பாண்டியன்,'பாரம்பரிய வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
ராமரவிக்குமார் உள்ளிட்ட அவரது ஆதரவு மனுதாரர்கள் மற்றும் சோலைகண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், வெங்கடேஷ், குமரகுரு, நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா, பொன்னு ரங்கன்: தீபத்துாணில் தீபம் ஏற்றினால்தான் சுற்றிலும் உள்ள ஊர்களை சேர்ந்த மக்களுக்கு தெரியவரும். உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றினால் மக்களுக்கு தெரியாது. தீபத்துாணில் ஏற்றினால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. பிற மதத்தினர் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு, அறநிலையத்துறை தரப்பில்தான் அனுமானத்தின் அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது. தர்கா எல்லை சுற்றுச்சுவரிலிருந்து தீபத்துாண் 63.20 மீ.,துாரத்தில் அமைந்துள்ளது.
அரசு தரப்பு: 1920 முதல் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. 105 ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறையை தற்போது மாற்ற முடியாது. மலை உச்சியிலுள்ள தீபத்துாணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர் கோருவதற்கு ஆதாரம் தாக்கல் செய்யவில்லை. பிரச்னையை உருவாக்கும் வகையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் கோரிக்கை தொடர்பாக கோயில் செயல் அலுவலருக்கு அனுப்பிய மனுவில் தீபத்துாணில்தான் ஏற்ற வேண்டும் என குறிப்பிடவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்றம் 1994 ல் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் மனுவை கோயில் செயல் அலுவலர் நிராகரித்ததை எதிர்த்து அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் கமிஷனரிடம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்தது தவறு.
வக்புவாரிய தரப்பு: சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும். ராம ரவிக்குமாரின் மனு நிலைக்கத்தக்கதல்ல. ஆதாரத்தை அவர் தாக்கல் செய்யவில்லை. கோயில் நிர்வாகத்திற்கு வக்பு வாரியம் ஒத்துழைப்பு அளிக்கத் தயார். ஒட்டுமொத்த மலையையும் அளவீடு செய்தால்தான் தீர்வு கிடைக்கும்.
தர்கா நிர்வாகம் தரப்பு: தர்கா எல்லைக்குள் தீபத்துாண் உள்ளது. அங்கு தீபம் ஏற்ற முடியாது. வழக்கம்போல் மாற்று இடத்தில் தீபம் ஏற்றுவதில் ஆட்சேபனை இல்லை. ஏற்கனவே இரு தரப்பிலும் ஒப்புக் கொண்டபடி ஒட்டுமொத்த மலையையும் அளவீடு செய்தால்தான் தீர்வு கிடைக்கும்.
அரங்கநாதன் தரப்பு: கோயில் கருவறைக்கு மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என கோயிலின் மூத்த ராஜபட்டர் தெரிவித்துள்ளார். அவர் அதில் நிபுணத்துவம் பெற்றவர். இவ்விவகாரத்தில் ராம ரவிக்குமார் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ராம ரவிக்குமார், பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் மனுக்கள் அனுமதிக்கப்படுகிறது. கனகவேல் பாண்டியன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றார்.

