/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.60 வழிப்பறி செய்தவர் 27 ஆண்டுகளுக்கு பின் கைது
/
ரூ.60 வழிப்பறி செய்தவர் 27 ஆண்டுகளுக்கு பின் கைது
ரூ.60 வழிப்பறி செய்தவர் 27 ஆண்டுகளுக்கு பின் கைது
ரூ.60 வழிப்பறி செய்தவர் 27 ஆண்டுகளுக்கு பின் கைது
ADDED : நவ 09, 2024 11:01 PM

மதுரை:மதுரை, அண்ணாநகர் ஜக்காதோப்பைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 55.
இவர், 1997ம் ஆண்டு, 60 ரூபாய் வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலைமறைவானார்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க, சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சந்தானபாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோர் பழைய வழக்குகளை ஆய்வு செய்தனர்.
ஜக்காதோப்புக்கு சென்று பன்னீர்செல்வம் குறித்து விசாரித்தபோது, சிவகாசி பகுதியில் குடும்பத்துடன் வசிப்பது தெரிந்தது.
அங்கு உள்ளூர் போலீசார் மற்றும் தெப்பக்குளம் போலீசாருடன் சென்று விசாரித்தனர். அங்குள்ள ஒயின்ஷாப்பில் வேலை செய்த பன்னீர்செல்வத்தை கண்டுபிடித்து கைது செய்தனர்.