/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோட்ல இல்ல கோடு; ராத்திரி படும் பாடு
/
ரோட்ல இல்ல கோடு; ராத்திரி படும் பாடு
ADDED : பிப் 17, 2026 06:58 AM
சோழவந்தான்: சோழவந்தான், ஆனைகுளம் ரோட்டில் வெள்ளை கோடுகள் அமைக்காததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் ஆனைகுளம் வரை 8.7 கி.மீ., நீளத்திற்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் தார் ரோடு அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் ரோட்டின் இரு புறமும், வேகத்தடையிலும் வெள்ளைக்கோடுகள் வரையப்படவில்லை. இதனால் இரவில் ரோட்டின் ஓரங்கள், வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன விபத்து ஏற்படுகிறது. மேலும்டூவீலரில் வருவோர் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வெள்ளை கோடுகள் வரைய டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது. கூடிய விரைவில் கோடுகள் அமைக்கப்படும்' என்றனர்.

