ADDED : ஜன 14, 2026 06:57 AM

மதுரை: மதுரையில் இரண்டு நாட்களாக சாரலும், துாறலுமாக மழைப் பொழிவு இருப்பதால் நகர் முழுவதும் கடும் குளிராக உள்ளது.
வடகிழக்கு பருவமழை முடியும் தறுவாயில் சில நாட்களாக வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் சாரல், துாறலாக மழை பொழிந்தது. நகர் முழுவதும் பெய்த மழையால் குளிர் அதிகமாக இருந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கிய மழை மாலை வரை தொடர்ந்தது.
ரோடுகளில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் பல பகுதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. சாலையோர வியாபாரம் பாதித்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மழையளவு வருமாறு நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீ.,யில்) வருமாறு: மதுரை வடக்கு- 0.6, தல்லாகுளம் 0.4, சிட்டம்பட்டி 5.4, கள்ளந்திரி 5, இடையபட்டி 1, தனியாமங்கலம் 8, மேலுார் 6.2, புலிப்பட்டி 8.4, சாத்தையாறு அணை 5.8.

