sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 குன்றத்து கோயிலில் தீர்த்த உற்ஸவம்

/

 குன்றத்து கோயிலில் தீர்த்த உற்ஸவம்

 குன்றத்து கோயிலில் தீர்த்த உற்ஸவம்

 குன்றத்து கோயிலில் தீர்த்த உற்ஸவம்


ADDED : டிச 05, 2025 05:11 AM

Google News

ADDED : டிச 05, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா உச்ச நிகழ்ச்சியாக தீர்த்த உற்ஸவம் நேற்று நடந்தது.

நவ. 25ல் துவங்கிய விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் புறப்பாடாகினர். தீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்த னாம்பிகை, விநாயகர், அஸ்தரதேவர் எழுந்தருளினர்.

நவ. 25முதல் நடந்த யாகசாலை பூஜை நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டது. வெள்ளிக் குடங் களில் இருந்த புனித நீரால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு அஸ்தரதேவர் பல்லக்கிலும், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிம்மாசனத்திலும் சரவணப் பொய்கையில் எழுந்தருளினர்.

ஆறுமுக சுவாமி சன்னதியில் யாக பூஜை முடிந்து சரவணப் பொய்கை தண்ணீரில் அஸ்தரதேவரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று தீர்த்த வாரி உற்ஸவம் நடந்தது. இரவு தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை ரத வீதிகளில் புறப்பாடாகி அருள் பாலித்தனர்.






      Dinamalar
      Follow us