sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பெண் தொழில்முனைவோருக்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளது மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தகவல்

/

 பெண் தொழில்முனைவோருக்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளது மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தகவல்

 பெண் தொழில்முனைவோருக்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளது மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தகவல்

 பெண் தொழில்முனைவோருக்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளது மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தகவல்


ADDED : நவ 15, 2025 05:56 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''தொழில் துவங்குவதற்கான எல்லா திட்டத்திலும் பெண் தொழில் முனைவோருக்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளதென'' இந்திய மகளிர் கூட்டமைப்பு (ஐவின்) கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன் தெரிவித்தார்.

அமைப்பாளர் பூர்ணிமா வரவேற்றார். பொதுமேலாளர் கணேசன் பேசியதாவது: பிரதமரின் பி.எம்.இ.ஜி.பி., திட்டம், மாநில அரசின் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம், நீட்ஸ் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களிலும் பெண் தொழில்முனைவோருக்கு 50 சதவீத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தொழில் தொடங்க பெண்கள் முன்வர வேண்டும். பி.எம்.இ.ஜி.பி., திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த வயதினரும் உற்பத்தி, சேவைத்தொழிலில் ஈடுபடலாம்.

இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்பினால் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் கிராமத் தொழில்கள் வாரியம், மாவட்ட தொழில் மையம், காயர் போர்டு அலுவலகங்களை அணுகலாம். விண்ணப்ப படிவம் பெறுவது முதல் மானியம் வழங்குவது வரை அனைத்தும் ஆன்லைன் மூலம் செயல் படுத்தப்படுகிறது.

மாநில அரசின் யு.ஓய்.இ.ஜி.பி., திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை வியாபாரம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது. அதேபோல 'நீட்ஸ்' திட்டத்தின் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு உற்பத்தி, சேவைத்தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்குவதற்கு தேவையான இ.பி., தீயணைப்பு துறை உட்பட பல்வேறு துறைகளின் சான்றிதழ் பெற மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 'சிங்கிள் விண்டோ' முறையை அணுகலாம் என்றார்.

இணை அமைப்பாளர் ஹேமா நன்றி கூறினார். நிர்வாகி சத்யா ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us