sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கார் சக்கரங்களை திருடிவிட்டு செங்கல் வைத்த திருடர்கள்

/

 கார் சக்கரங்களை திருடிவிட்டு செங்கல் வைத்த திருடர்கள்

 கார் சக்கரங்களை திருடிவிட்டு செங்கல் வைத்த திருடர்கள்

 கார் சக்கரங்களை திருடிவிட்டு செங்கல் வைத்த திருடர்கள்


ADDED : நவ 22, 2025 12:13 AM

Google News

ADDED : நவ 22, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பை பாஸ் ரோடு துரைசாமி நகர், நமச்சிவாய நகரில் பலரும் தங்கள் கார்களை, ரோட்டோரத்தில் நிறுத்தி வருகின்றனர். இந்நகரின் 4-வது தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான நவீன்சந்தர், 39, என்பவர், ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த தன் காரில் இருந்த பொருட்களை எடுக்க, நேற்று காலை சென்றபோது அதிர்ச்சியடைந்தார்.

காரில் இடதுபுறத்தில் இருந்த இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டிருந்தன. கார் ஒருபுறம் சாயாமல் இருக்க செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல், அதே பகுதியில் உள்ள கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் காரின் வலதுபுறம் இருந்த 2 சக்கரங்கள் கழற்றப்பட்டு, பேவர் பிளாக் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், ஆம்னி வேனின் நம்பர் பிளேட்களை திருடி சென்றுள்ளனர். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், டூ - வீலரில் வந்த இருவர் இச்செயலில் ஈடுபட்டது, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us