/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் ஆதங்கம்
/
குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் ஆதங்கம்
குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் ஆதங்கம்
குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் ஆதங்கம்
ADDED : ஜூலை 09, 2025 08:13 AM
திருப்பரங்குன்றம்: 'குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகளால் எப்படி பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என திருப்பரங்குன்றத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் துணைத் தாசில்தார் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
விவசாயிகள் மாரிச்சாமி, சிவராமன், சின்னையா, பாண்டி, லட்சுமணன், மாகமுனி உட்பட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தென்பழஞ்சி மானாவாரி கண்மாயில் சீமைக் கருவேல் மரங்களை அகற்ற வேண்டும். மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை தேவை. வரத்து கால்வாய்களைத் துார்வார வேண்டும். நுாறுநாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தென்கால் கண்மாய் பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை.
மாடக்குளம் கிராமத்தில் பல பட்டாக்களில் சம்பந்தமே இன்றி எந்த ஆவணங்களும் இல்லாமல் நில உரிமைப் பதிவேட்டில் போலி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது எப்படி என்று தெரியவில்லை.
பல மாதங்களாக பல துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. அப்புறம் எப்படி எங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். கடந்த கூட்டங்களில் வழங்கிய மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை தெரிவிப்பதே இல்லை என்றனர்.
உசிலம்பட்டி, ஜூலை 9-