நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்தின் பிறந்த நாள், பத்மபூஷன் விருது பெற்றது, கட்சியின் 20ம் ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
நகர் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சேகர் கொடியேற்றினார். பிறகு விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு கொடுத்து கொண்டாடினர். அன்னதானம், மரக்கன்றுகளை வழங்கினர். மாவட்ட நிர்வாகிகள் சோனைமுத்து, அமானுல்லா, பார்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.