sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கார் - ஆட்டோ மோதி விபத்து பெண்கள் உட்பட மூவர் மரணம்

/

கார் - ஆட்டோ மோதி விபத்து பெண்கள் உட்பட மூவர் மரணம்

கார் - ஆட்டோ மோதி விபத்து பெண்கள் உட்பட மூவர் மரணம்

கார் - ஆட்டோ மோதி விபத்து பெண்கள் உட்பட மூவர் மரணம்


ADDED : மார் 30, 2025 01:58 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்:பேரையூர் அருகே கார் - ஆட்டோ மோதியதில், நெல் நடவு செய்ய வந்த இரு பெண்கள் உட்பட மூன்று கூலி தொழிலாளிகள் பலியாகினர்.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, எ.பாரைப்பட்டி பகுதியில் நெல் நடவுப் பணிகள் நடக்கின்றன. இதற்காக, விருதுநகர் மாவட்டம், வத்ராப் நெடுங்குளம் பகுதி கூலி தொழிலாளர்கள், 10 பேருக்கு மேல் ஆட்டோவில் ஏ.பாரைப்பட்டிக்கு நேற்று காலை வந்தனர். பணிகளை முடித்துவிட்டு மாலை, 4:00 மணி அளவில் ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டனர்.

திருமங்கலம்- - ராஜபாளையம் ரோட்டில் பாரைப்பட்டி விலக்கருகே சென்னையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கிச் சென்ற கார் ஆட்டோவின் பின்புறம் மோதியதில், தங்கம்மாள், 45, அருஞ்சுணை, 50, ராமர், 60, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

நான்கு பேர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கார் டிரைவர் சென்னை அசோக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us