/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பு பணியால் மூன்று ரயில்கள் ரத்து
/
பராமரிப்பு பணியால் மூன்று ரயில்கள் ரத்து
ADDED : பிப் 09, 2026 04:42 AM
மதுரை: தெலுங்கானா மாநிலம் மந்தமாரி ஸ்டேஷனில் நடைபெறும் விரிவாக்கப் பணி காரணமாக மதுரை - சண்டிகர் இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, பிப். 9 (இன்று), 13ல் காலை 8:05 மணிக்கு புறப்படும் சண்டிகர் - மதுரை (20494), பிப். 11, 15ல் இரவு 11:40 மணிக்கு புறப்படும் மதுரை - சண்டிகர் (20493) ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்து சோழவந்தான் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை (பிப். 10), கோவை - நாகர்கோவில் ரயில் (16322), கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கரூர், எரியோடு வழியாக திண்டுக்கல் வரை வழக்கம்போல் இயக்கப்பட்டு, திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

