ADDED : நவ 10, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம், : மதுரை வில்லாபுரம் சங்க விநாயகர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
கோயிலில் நவ. 2ல் கந்த சஷ்டி விழா காப்புகட்டுடன் துவங்கியது. சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி, சூரசம்ஹார லீலை, தேரோட்டம் நடந்தது. உச்ச நிகழ்ச்சியாக முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.