ADDED : ஜன 02, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மண்டல அலுவலகம் சார்பில், பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ஏ.எஸ்.யு.எஸ்.இ.,), கால முறை தொழிலாளர் கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.,) குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
துணை இயக்குநர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். மண்டல இயக்குநர் விஷ்ணுராஜ் பேசுகையில், ''ஏ.எஸ்.யு.எஸ்.இ., கணக்கெடுப்பில் மூலப்பொருட்களை பெறுவதற்கான போக்குவரத்துச் செலவுகள் சேகரிக்கப்படுகின்றன. பி.எல்.எப்.எஸ்., கணக்கெடுப்பில் தொழிலாளர் பங்கேற்பு, வேலைவாய்ப்பு, வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. தேசிய புள்ளியியல் அமைப்பின் முக்கிய ஆய்வுகளில் இவை இரண்டும் தேசிய வளர்ச்சிக்கு அவசியம்'' என்றார்.
