நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: மணப்பச்சேரி, புதுாரில் கொட்டாம்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான சொட்டுநீர் பாசன பராமரிப்பு முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் சுபாஷ் சாந்தி, அலுவலர் ரகுராமன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன், சத்திய கீர்த்தனா கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு தனி அடையாள எண் பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

