நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கேசம்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் காய்கறி, பழ பயிர் களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
கொட்டாம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்மணி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
துணை, உதவி வேளாண் அலுவலர்கள் ரகுராமன், பாலசுப்பிரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கண்ணன், சத்திய கீர்த்தனா, பயிர் பரிசோதனை அலுவலர் சேதுபதி கலந்து கொண்டனர்.

