ADDED : ஜூலை 04, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் ஆங்கிலத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
துறைத்தலைவர் எஸ். கோமதி வரவேற்றார். முதல்வர் டாக்டர் அல்லி புதிய ஆசிரியர்களை வாழ்த்தி கல்லுாரியின் தொலை நோக்கு பார்வை, செயல்திட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள், கலாசார விழுமியங்களை பின்பற்றுவது குறித்து விளக்கினார்.
கல்லுாரியின் தொழில்முறை பணி கலாசாரம் குறித்து மின்னணு துறை தலைவர் சண்முகலதா விளக்கினார்.
ஆராய்ச்சி-மேம்பாட்டுப்பிரிவு டீன் எஸ். வாசுகி தொடர்ச்சியான கற்றலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். எஸ்.பெனிட்டா நன்றி கூறினார்.