ADDED : செப் 03, 2026 01:33 AM
அ நிறம் | அளவு
மதுரை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே பேரணி யார்டில் பராமரிப்பு பணி காரணமாக 'வைகை' உள்ளிட்ட முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* செப். 3 (இன்று), 4, 5ல் எழும்பூர் - திருநெல்வேலி 'வந்தேபாரத்' ரயில் (20665) செல்லும் வழியில் 20 நிமிடங்கள் தாமதமாகவும், எழும்பூர் - மதுரை 'வைகை' ரயில் (12635) ஒருமணி நேரம் 50 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படவுள்ளன.
* இன்று தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் (06109) செல்லும் வழியில் ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் தாமதமாகவும், நாளை (செப்.4) தாம்பரம் - போடி சிறப்பு ரயில் (06059) ஒன்றரைமணி நேரம் தாமதமாகவும் இயக்கப்படவுள்ளன.
