ADDED : ஜூலை 29, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மேற்கு கோட்ட மின்வாரியம் தெற்கு அரசரடி உபகோட்ட பகுதியில் கூடுதல் மின்பளு குறித்து அதிகளவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 250 கிலோவாட் கூடுதல் மின்பளுவை நிவர்த்தி செய்ய புதிதாக 100 கிலோவாட் டிரான்ஸ்பார்மர் வஜ்ரா எஸ்.எஸ்., 3 என்ற பெயரில் பொருத்த முடிவு செய்தனர். மேற்பார்வை பொறியாளர் ரெஜினாராஜகுமாரி உத்தரவின் பேரில், செயற்பொறியாளர் லதா, உதவி செயற்பொறியாளர் ஷெரின்பாத்திமா உட்பட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்தனர். இதனால் கூடுதல் மின்அழுத்தம் முடிவுக்கு வந்தது.