/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மரங்களை வெட்டியதால் 'மரங்களின் காதலன்' தற்கொலை
/
மதுரையில் மரங்களை வெட்டியதால் 'மரங்களின் காதலன்' தற்கொலை
மதுரையில் மரங்களை வெட்டியதால் 'மரங்களின் காதலன்' தற்கொலை
மதுரையில் மரங்களை வெட்டியதால் 'மரங்களின் காதலன்' தற்கொலை
ADDED : செப் 28, 2025 03:59 AM

மதுரை: மதுரையில் இடவசதிக்காக 4 மரங்களை வெட்டியது குறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லாததால் 'மரங்களின் காதலன்' என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட ஜெகதீஷ் 35, தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அழகப்பன் நகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த ஜெகதீஷ், தனியார் கல்லுாரி பஸ் டிரைவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வந்தார். தான் வசிக்கும் பகுதியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார். இதற்காகவே பசுமை விஞ்ஞான புரட்சி மன்றம் என்ற அமைப்பை நடத்தினார். திருமணம் செய்து கொள்ளாமல் சமூகசேவைகளில் ஈடுபட்டு வந்தார்.
செப்.,19ல் வீட்டருகே ரோட்டோரத்தில் இருந்த 3 வேப்ப மரங்கள், ஒரு புங்கன் மரத்தை தங்கள் இடத்திற்கு செல்ல இடையூறாக இருப்பதாக கூறி தனியார் வெட்டி அகற்றினர்.
இதனால் அவர்களுக்கும், ஜெகதீஷிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார், ஆதார் அட்டையை எடுத்து வருமாறு ஜெகதீஷிடம் தெரிவித்தனர். போலீசார் தன் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் சமரசம் செய்ய முயற்சிக்கிறார்கள் எனக்கருதி, வீட்டிற்குள் சென்றவர் மரங்களை பாதுகாக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். அந்த பாட்டிலுடன் வந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த ஜெகதீஷ், நேற்று அதிகாலை இறந்தார்.