ADDED : ஜூலை 07, 2025 02:29 AM
மதுரை : உலக உயிரியல் பூங்கா தினத்தையொட்டி யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை பூங்காவில் நடந்தது. தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். சிலம்பம் மாஸ்டர் பாண்டி வரவேற்றார்.
உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் பேசுகையில், ''உலகளாவிய அளவில் உயிரியல் பூங்காக்கள் பலவகை உயிரினங்களை பாதுகாக்கும் இடமாக உள்ளது. மேலும் புவிமாற்றம், சுற்றுச்சூழல் மாற்றங்கள் பாதிப்புகளை ஆராய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன'' என்றார்.
பூங்காவில் உள்ள மரக்கன்றுகளுக்கு கவாத்து பணி, பராமரிப்பு பணி, களப்பணி நடந்தது. நிலவேம்பு, கடம்பம், புங்கை, நீர்மருது, மகிழம், செண்பக மரக்கன்றுகள் நடப்பட்டன. பவுண்டேஷன் ஆலோசகர்கள் ராகேஷ், பாஸ்கரன், ஸ்டெல்லா மேரி, பரமேஸ்வரன், ஜெயபாலன், வெண்பா,கபிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.