ADDED : மே 12, 2026 01:34 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: து ாத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் 22. இவர் மீது அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் உள்ளது. வழக்கு தொடர்பாக தமிழரசனை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியதிருந்ததால் காவல் நிலைய அறையில் அடைத்து வைத்திருந்தனர். போலீசார் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் திடீரென தமிழரசன் அறையை திறந்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அதிர்ச்சியடைந்த போலீசார் தமிழரசனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
