sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் தீப அஞ்சலி

/

விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் தீப அஞ்சலி

விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் தீப அஞ்சலி

விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் தீப அஞ்சலி


ADDED : ஜூன் 13, 2025 08:33 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 08:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் லண்டன் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது. 241 பேர் உடல் கருகி பலியாகினர்.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய மதுரை எஸ்எஸ் காலனியில் உள்ள ஶ்ரீ மஹாபெரியவர் கோவிலில் அனுஷத்தின் அனுக்கிரஹம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் தீப அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறுவர் சிறுமியர் பெண்கள் முதியோர் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்று தங்களது அஞ்சலிகளை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us