ADDED : ஆக 01, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அருகே தும்மகுண்டு பெருமாள் பட்டியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டியின் கணவர் இறந்த விட்டார்.
இதனால் தனது அண்ணன் மகளுடன் வசிக்கிறார். பெருமாள் பட்டியில் உள்ள தோட்டத்திற்கு அருகே உள்ள தோட்டத்தை ஒத்திக்கு வாங்கி சிந்துபட்டியை சேர்ந்த முத்துவீரன் 50, விவசாயம் செய்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கம்மாள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குடிபோதையில் வந்த முத்துவீரன், தங்கம்மாளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றார். அவர் கூச்சலிடவே முத்துவீரன் தப்பினார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

