ADDED : ஜன 26, 2026 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கம்பூரில் உள்ள பட்டனேரி பாறையில் (டி.என்.81 கே 4767) காரில் வந்த அதிகாரிகள் நால்வர் பாறையை சுத்தியலை கொண்டு உடைப்பதைப் பார்த்த கிராம மக்கள் விளக்கம் கேட்டனர்.
காரில் வந்தவர்கள் அனுமதி வாங்கி உள்ளதாக கூறவே, யாரிடம் அனுமதி வாங்கியுள்ளீர்கள் என மக்கள் கேட்டனர். மேலும் மக்கள் வீடியோ எடுக்கவே அவர்கள் நால்வரும் காரில் ஏறி கிளம்பினர். அதனால் மக்கள் மத்தியில் மீண்டும் டங்ஸ்டன் ஆய்வு நடைபெறுகிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே இதே பாறையில் 2018 டிசம்பரில் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இரண்டு தினங்களுக்கு முன் ஜன. 23 டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தான முதலாம் ஆண்டு வெற்றி விழா கொண்டாடிய நிலையில் மீண்டும் பாறையை ஆய்வு செய்தது மக்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

