sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மஞ்சள் அறுவடை பணி தீவிரம்

/

மஞ்சள் அறுவடை பணி தீவிரம்

மஞ்சள் அறுவடை பணி தீவிரம்

மஞ்சள் அறுவடை பணி தீவிரம்


ADDED : ஜன 15, 2024 04:03 AM

Google News

ADDED : ஜன 15, 2024 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு, : அலங்காநல்லுார், பாலமேடு பகுதிகளில் மஞ்சள் கிழங்குகளை பொங்கல் பண்டிகைக்கு விற்க விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் கிணறு, போர்வெல் பாசனத்தில் அதிகளவு மஞ்சள் பயிரிடப்பட்டு வந்தது. போதிய விலை, அதிக முதலீடு காரணமாக குறைந்த அளவு விவசாயிகள் மட்டுமே மஞ்சள் சாகுபடி செய்திருந்தனர்.

எர்ரம்பட்டி விவசாயி பாலசுப்பிரமணி கூறியதாவது: அரை ஏக்கரில் மஞ்சள் சாகுபடிக்கு உழவு, நடவு துவங்கி அறுவடைக்கு தொழிலாளர்கள் என ரூ.ஒரு லட்சம் செலவாகிறது. கடந்தாண்டு உற்பத்தி குறைவு என்பதால் பொங்கலுக்கு அறுவடை செய்த மஞ்சள் மினிவேனில் ஒரு லோடு ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். தற்போது ஒரு லோடு மஞ்சள் ரூ.30 முதல் 35 ஆயிரம் வரை விற்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.






      Dinamalar
      Follow us