sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

600 பேரிடம் ரூ.105 கோடி மோசடி செய்த இருவர் கைது

/

600 பேரிடம் ரூ.105 கோடி மோசடி செய்த இருவர் கைது

600 பேரிடம் ரூ.105 கோடி மோசடி செய்த இருவர் கைது

600 பேரிடம் ரூ.105 கோடி மோசடி செய்த இருவர் கைது


ADDED : ஜன 28, 2024 01:39 AM

Google News

ADDED : ஜன 28, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை உட்பட தென்மாவட்டங்களில், நியோ மேக்ஸ் மோசடி நிதி நிறுவனத்தின் துணை நிறுவனங்களின் இயக்குனர்கள் இருவர், 600 பேரிடம், 105 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர்.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம், மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது.

இதன் இயக்குனர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உட்பட 25 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவர் சரணடைந்தனர்.

இது தொடர்பாக, 17 நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, 17.25 கோடி ரூபாய் மதிப்பிலான, 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மோசடி நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஸ்கோ பிராப்பர்ட்டிஸ் பி.லிட்., நிறுவனத்தின் இயக்குனர் சிவகங்கை மாவட்டம், தாமறாக்கியை சேர்ந்த அசோக்மேத்தா, 42, என்பவரை டி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இவர், 400 பேரிடம், 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். அதேபோல், டிரைடாஸ் பிராப்பர்ட்டிஸ் பி.லிட்., நிறுவன இயக்குனர் மதிவாணன், 40, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர், 200 பேரிடம் 45 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us