ADDED : மார் 21, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: சூவாஞ்சான்பட்டி நீலிக்கண்மாய் கரையில் நேற்று முன்தினம் எம்.மலம்பட்டி அய்யனார் 26, கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இவ் வழக்கில் சாத்தமங்கலம் சுரேஷ் 53, அவரது மனைவி சாந்தியை 44, போலீசார் கைது செய்தனர். விசாரணையில் எம். மலம்பட்டி விலக்கில் நடத்தி வரும் உணவகத்தில் அய்யனார் திருட வரவே தாக்கியதில் இறந்தது தெரிந்தது.
மேலும் கீழவளவு பிரவீன் 24, கார்த்திகேயன் 23, அருண் 21, ஆகியோர் கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு முன் சரணடைந்தனர்.

