ADDED : பிப் 15, 2024 05:46 AM

அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வராத குளியல் தொட்டியால் அரசு நிதி வீணாகி வருகிறது.
இங்குள்ள பெரிய இலந்தைகுளம் ரோட்டில் கடந்த 2021ம் ஆண்டு பொது நிதியில் ரூ. 3 லட்சத்தில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.
இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. குளியல் தொட்டி உள்ளேயும், வெளியேயும் செடிகள் முளைத்து புதர் மண்டி காட்சி தருகிறது.
டைல்ஸ் கற்கள் சேதமடைந்துள்ளன. இதனருகே 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத மகளிர் சுகாதார வளாகமும் புதருக்குள் மறைந்துள்ளது. விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக மாறி உள்ளது. குளியல் தொட்டி, மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒன்றிய நிர்வாகம் முன் வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
