/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தங்கமயில் நிறுவனத்தில் நாளை வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை
/
தங்கமயில் நிறுவனத்தில் நாளை வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை
தங்கமயில் நிறுவனத்தில் நாளை வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை
தங்கமயில் நிறுவனத்தில் நாளை வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை
ADDED : பிப் 13, 2024 06:41 AM
மதுரை : மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் நிறுவனத்தில் நாளை (பிப் 14) சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மாதங்களில் தை மாதம் சிறப்பானது. தை அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி திதி மிகவும் விசேஷமானது. இந்தப் பஞ்சமி திதியை வசந்த பஞ்சமி என்கின்றனர். இந்த நாளில் சரஸ்வதி தேவி அவதரித்தார் என்பது நம்பிக்கை.
இந்தாண்டு வசந்த பஞ்சமி, நாளை (பிப். 14) கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவியின் அருள் நிறைந்த இந் நாளில் மஞ்சள் மற்றும் மங்கலத்தின் மறு உருவமாகிய தங்கம் வாங்க மிக உகந்த நாள் என்பது ஐதீகம். இந்நாளில் மஞ்சள் நிற ஆடை, பூக்கள், அணிகலன்கள் வாங்கி பகவானுக்கு சமர்ப்பித்து அணிவதால் வாழ்வில் மங்கலம் உண்டாகும்.
இதையொட்டி மதுரை தங்கமயில் நிறுவனத்தில் நாளை (பிப்.14) ஒரு நாள் மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
தங்கம் 10 பவுன் வாங்கினால் அரை பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். வைரம் ஒரு காரட்டுக்கு ஒரு கிராம் முதல் 3 கிராம் வரை தங்க நாணயம் வழங்கப்படும். ஒவ்வொரு 10 கிராம் தங்கத்திற்கும் அரை கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.
இந்நாளில் தங்க நகை வாங்கும் அனைவருக்கும் சிறப்புப் பூஜை செய்து, சரஸ்வதி படமும் பரிசாக வழங்கப்படும் என தங்கமயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.