ADDED : மார் 17, 2026 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை திருநகரில் இருந்து விளாச்சேரி செல்லும் வழியில் உள்ள புளியங்குளம் கண்மாயில் சீரமைப்பு பணி துவங்கியது.
நீர்வளத்துறை வழிகாட்டுதலுடன் சக்தி கார்ட்ஸ் நிறுவனம் நிதி உதவியுடன் திருநகர் பக்கம், விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை சார்பில் கண்மாயை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சக்தி கார்ட்ஸ் தலைவர் ஷியாம் பிரகாஷ் குப்தா, கவுன்சிலர் சுவேதா, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவர் மணிகண்டன், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் நாகரத்தினம் துவக்கி வைத்தனர்.
கண்மாயில் நாட்டு மரங்கள் வளர்த்து பசுமையாக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

