ADDED : ஜன 25, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா துணை முதல்வர் கணேசன் தலைமையில் நடந்தது.
தமிழ்த்துறைப் பேரா சிரியர் ரேணுகா தேவி வரவேற்றார். முதல்வர் சந்திரன் பேசுகையில், 'சுவாமி விவேகானந்தர் போன்று உலகத்தின் பார்வை உங்கள் மீது திரும்பும் வகையில் இளைஞர்கள் சிந்தனைகளை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
விவேகானந்தர் பொன்மொழிகள் என்ற தலைப்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் நாகலட்சுமி நன்றி கூறினார்.

