sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநகராட்சி 'எக்கோ பார்க்'கில் நடை பயிற்சிக்கு பாதிப்பில்லை

/

மாநகராட்சி 'எக்கோ பார்க்'கில் நடை பயிற்சிக்கு பாதிப்பில்லை

மாநகராட்சி 'எக்கோ பார்க்'கில் நடை பயிற்சிக்கு பாதிப்பில்லை

மாநகராட்சி 'எக்கோ பார்க்'கில் நடை பயிற்சிக்கு பாதிப்பில்லை


ADDED : அக் 10, 2025 03:18 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி 'எக்கோ பார்க்' தனியார்மயத்தால் நடைப்பயிற்சியாளர்களுக்கு பாதிப்பு இல்லை' என தளபதி எம்.எல்.ஏ., உறுதியளித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி வளாகத்தில் உள்ளது 'எக்கோ பார்க்'. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த பார்க், தற்போது பராமரிப்பு பணிக்காக தனியார் வசம் விடப்பட்டுள்ளது. இதனால் எக்கோ பார்க் வாக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர், ஆணையாளர், தளபதி எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்தனர்.

மனுவில், 'தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். யோகா மையம், உடற்பயிற்சிக் கூடமும் செயல்பட்டு வருகிறது. பார்க்கை பராமரிக்கும் தனியார் நிர்வாகம் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை நடைப்பயிற்சியாளர்களுக்கு பாதிப்பு இன்றி செயல்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தளபதி எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் பேசிய பின்பு, நடைப்பயிற்சிக்கு பாதிப்பு வராது என எக்கோ கிளப் உறுப்பினர்களிடம் உறுதியளித்தார். வாக்கர்ஸ் கிளப் தலைவர் ரங்கராஜ்பாண்டியன், பொருளாளர் பெரியதம்பி தஸ்தகீர், நிர்வாகிகள் முருகன், பூமிநாதன், முத்துராமலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us