ADDED : ஏப் 04, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: திருமங்கலம் உச்சப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் நோயல் என்ற தியோ ஜனீஸ் 48. இவர மன்சூர், ரபீக் ஆகியோருடன் ஒரு கிலோ 'ஓபியம்' என்ற போதைப்பொருளை விற்க கடத்தியதாக கோவை போதைப்பொருள் சிறப்பு நுண்ணறிவுப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வந்த தியோ ஜனீஸ் தலைமறைவானார். இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள கோவை சிறப்பு நீதிமன்றம் நாளை(ஏப்.6) ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இவர் குறித்த தகவல் தெரிந்தால் 94981 06467ல் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் அறிவித்துள்ளனர்.
