sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கரும்பு ஆலைகளில் கழிவுகள் எரிப்பு

/

கரும்பு ஆலைகளில் கழிவுகள் எரிப்பு

கரும்பு ஆலைகளில் கழிவுகள் எரிப்பு

கரும்பு ஆலைகளில் கழிவுகள் எரிப்பு


ADDED : செப் 21, 2024 05:52 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: வாடிப்பட்டி, அலங்காநல்லுரர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலைகள் அதிகளவில் செயல்படுகின்றன.

இதில் தனிச்சியம், செம்புக்குடிப்பட்டி, விட்டங்குளம், அலங்காநல்லுார் பகுதி கிராமங்களில் உள்ள ஆலைகளில் தொழிற்சாலை கழிவுகளை தொடர்ந்து எரிக்கின்றனர்.

இப்பகுதி தொழிற்சாலைகளில் வீணாகும் டயர், ரப்பர், ஆயில், சாக்கு போன்ற கழிவுகளை விலைக்கு வாங்கி வந்து ரோட்டின் ஓரங்களில் கொட்டி இருப்பு வைக்கின்றனர். இதனை எரிப்பதால் கரும்புகை சூழ்ந்து காற்று மாசுபடுகிறது. முதியோர், குழந்தைகள் இவ்வழியாக செல்வோர் மூச்சுத் திணறல், கண் எரிச்சலால் பாதிக்கின்றனர். நோய் தொற்று அபாயம் உள்ளது.

கரும்பு ஆலைகளில் தீ விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நச்சுக் கழிவுகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us