ADDED : மார் 23, 2025 04:02 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை தானம் மக்கள் கல்வி நிலையத்தில் உலக தண்ணீர் தினவிழாவையொட்டி கண்மாய் வளங்களும் பயன் உரிமையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
நிலைய ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். விழா நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் சாமுவேல் விளக்கினார். எழுத்தாளர் திருமலை, தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் வாசிமலை, வயலகம் அறக்கட்டளை முதன்மை நிர்வாகி வெங்கடேசன், முதன்மை செயல் அலுவலர் மோகன் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஆனந்தபூபதி நன்றி கூறினார்.
