sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இருபோக சாகுபடிக்கு ஜன.26 வரை தண்ணீர் திறப்பு

/

இருபோக சாகுபடிக்கு ஜன.26 வரை தண்ணீர் திறப்பு

இருபோக சாகுபடிக்கு ஜன.26 வரை தண்ணீர் திறப்பு

இருபோக சாகுபடிக்கு ஜன.26 வரை தண்ணீர் திறப்பு


ADDED : ஜன 21, 2025 05:56 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பேரணை முதல் கள்ளந்திரி வரையுள்ள இருபோக சாகுபடி நிலங்களுக்கான 2வது போகத்திற்கு ஜன. 26 வரை தண்ணீர் திறக்கப்படுகிறது.

மதுரை நீர்வளத்துறை வளாகத்தில் பெரியாறு வைகை உபகோட்டம் 1 ல் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப் தலைமையில் நடந்தது. 45 ஆயிரம் ஏக்கர் 2ம் போகத்திற்கு டிச. 18 ல் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக ஜன. 13 இரவு முதல் 4 நாட்கள் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த 4 நாட்களை கணக்கிட்டு ஜன. 26 வரை வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் திறக்க விவசாயிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டது. ஜன. 26 க்கு பின் 5 நாட்கள் தண்ணீர் திறப்பு, நான்கு நாட்கள் அடைப்பு என மார்ச் 30 வரை வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us