ADDED : மார் 09, 2026 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி சின்ன இரும்பாடியில் மேல்நிலை குடிநீர்தொட்டி கட்டி ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
இங்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 2024 -- 25ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. தொட்டியின் மேல் கட்சிக் கொடிகளைக் கட்டுகின்றனர். சிறுவர்களும் தொட்டியில் ஏறி விளையாடுகின்றனர். உயரமான தொட்டி என்பதால் விபரீதம் விளையவும் வாய்ப்புள்ளது.
அனுமதியின்றி மேலே ஏறலாம் எனும் நிலை உள்ளதால் வேறு சம்பந்தமில்லாத நபர்களால் சமூகவிரோத செயல்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. ஒன்றிய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து தொட்டியை திறக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

