ADDED : ஜூலை 08, 2025 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூமாதேவி ஸ்ரீனிவாச பெருமாள் பிரதிஷ்ட தின விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
காலையில் அனுக்கை பூஜை, கணபதி ஹோமம், புண்ணியாக வாசனம், கும்ப பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. உற்ஸவர்களுக்கு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி திருக்கல்யாணம் நடந்தது.
கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்மன் பிரதிஷ்டை தின விழாவை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது.