ADDED : அக் 30, 2025 04:10 AM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: அவனியாபுரம் வில்லாபுரம் சங்க விநாயகர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
கோயிலில் அக். 22ல் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. நேற்று முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி திருக்கல்யாணம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் செந்தில்குமார், கருணாநிதி, சந்திரசேகர், அனுசியா ஏற்பாடுகளை செய்தனர்.
