ADDED : செப் 07, 2026 12:45 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: விளாச்சேரி ஸ்ரீ சைதன்ய விட்டல் மந்திர் வேதகுருகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா செப். 4ல் துவங்கியது.
யாக பூஜை, 108 கலச பூஜை, உறியடி விழா நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலையில் சுப்ரபாதம் முடிந்து, உற்ஸவர், மூலவர்களுக்கு அபிஷேகம் முடிந்து திருக்கல்யாண அலங்காரமானது. பூஜை, பஜனை முடிந்து மூலவர்கள் பாண்டுரங்கனுக்கு பச்சை, மஞ்சள் பட்டும், ருக்மணிக்கு நீல கலர் பட்டுப் புடவை சாத்துப்படி செய்யப்பட்டு சம்பிரதாயங்கள் முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. தீபாராதனைக்குப்பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
