ADDED : ஜன 30, 2024 07:23 AM
திருப்பரங்குன்றம் : ஹிந்து அறநிலையத்துறை சார்பில் முருகப்பெருமானின் அறுபடை வீடு ஆன்மிகப் பயண திட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள் 207 பேர் நேற்று முன்தினம் சென்னை கந்தகோட்டத்திலிருந்து புறப்பட்டனர்.
திருத்தணியில் தரிசனம் முடித்து நேற்று காலை திருப்பரங்குன்றம் வந்தனர்.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பொம்மதேவன், ராமையா, கோயில் துணை கமிஷனர் சுரேஷ் வரவேற்றனர்.
பணியாளருக்கு பாராட்டு
கோயிலில் துாய்மை பணிகள், பாதுகாப்பு பணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜன.,27ல் கோயிலில் உண்டியல் பணம் திருடியவரை பிடிக்க உதவிய பரிஜாதகர்கள் சுவாமி நாதன், ஆனந்த், பணியாளர்கள் முத்துவேல், மாரி ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
அழகர்கோவில்: அறுபடை வீடு செல்லும் பக்தர்கள் சோலைமலை முருகன் கோயில் வந்தனர்.
அவர்களுக்கு கோயில் துணை கமிஷனர் ராமசாமி போர்வை, சால்வை, துண்டு, பெட்ஷீட் குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகளை கோயில் சார்பில் வழங்கினார்.