ADDED : செப் 24, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நெடுமதுரை ஊராட்சியில் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 102வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வேட்டையன், தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனர். மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா நலத்திட்டங்கள் வழங்கினார்.