ADDED : மார் 11, 2024 06:11 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.
அமைச்சர்கள் கே.என் நேரு, பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அமைச்சர் நேரு பேசுகையில், ''நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன, என்றார்.
