ADDED : ஜன 07, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் சாரல் அரிமா சங்கம் சார்பில் பசிப்பிணி தீர்க்கும் சேவை திட்டத்தின் கீழ் திருமங்கலம் பகுதியில் உள்ள 30 ஆதரவற்றவர்களுக்கு அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.
தலைவர் விஜய பாண்டி தலைமை வகித்தார். பொருளாளர் முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, முரளிதரன், நிர்வாகிகள் மாரியப்பன், கார்த்திக், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
