ADDED : ஜூலை 04, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: வெள்ளநாதன்பட்டியில் மருத்துவத்துறை சார்பில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். மேலுார் நகராட்சி தலைவர் முகமது யாசின் குத்துவிளக்கேற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன், நகராட்சி கமிஷனர் சக்திவேல், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.திருப்பரங்குன்றம்
பாம்பன் சுவாமி நகர், எஸ்.ஆர்.வி. நகர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியிலும் முதல்வர் திறந்து வைத்தார். மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர்கள் போஸ்முத்தையா, சிவா குத்துவிளக்கேற்றினர்.