ADDED : பிப் 08, 2026 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: குருவித்துறையில் புதிய ரேஷன் கடையை விரைந்து திறக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு ஊராட்சி அலுவலகம் அருகே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2025--26ன் கீழ் ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட்டது. பணி முடிந்து 2 மாதங்களாகியும் கடை திறக்கப்படவில்லை. மக்கள் ஓய்வெடுக்கவும், சிறுவர்கள் விளையாடவும் அவ்விடம் பயன்படுகிறது.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ''மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளோம். மீட்டர் பற்றாக்குறையால் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் திறக்கப்படும்'' என்றனர்.

