sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஐந்து மாதங்களாக தொடர்ந்து தட்டுப்பாடு பதுங்கியதா கோதுமை; மதுரை கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில்

/

ஐந்து மாதங்களாக தொடர்ந்து தட்டுப்பாடு பதுங்கியதா கோதுமை; மதுரை கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில்

ஐந்து மாதங்களாக தொடர்ந்து தட்டுப்பாடு பதுங்கியதா கோதுமை; மதுரை கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில்

ஐந்து மாதங்களாக தொடர்ந்து தட்டுப்பாடு பதுங்கியதா கோதுமை; மதுரை கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில்


ADDED : ஆக 28, 2025 04:44 AM

Google News

ADDED : ஆக 28, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரேஷன் கார்டில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 6 முதல் 30 கிலோ வரை பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

சுமாராக இருந்தாலும் புழுங்கல் அரிசிக்கு இதுவரை தட்டுப்பாடு வந்ததில்லை. ஒரு கார்டுக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை பச்சரிசி வழங்கலாம் என்றாலும் 2 கிலோவுக்கு மேல் பெரும்பாலான கடைகளில் வழங்குவதில்லை. மேலும் 5 மாதங்களுக்கு மேலாக கார்டுதாரர்களுக்கு கோதுமை வழங்கவே இல்லை.

ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறியதாவது: ஒரு கடைக்கு குறைந்தது 500 முதல் 1000 ரேஷன் கார்டுகள் இருக்கும். ஒரு கார்டுதாரருக்கு 2 கிலோ கோதுமை தர வேண்டும் எனில் மாதம் 1000 முதல் 2000 கிலோ கோதுமை அனுப்ப வேண்டும். ஆனால் மாதந்தோறும் 50 முதல் 200 கிலோ தான் தருகின்றனர். ஒருவருக்கு ஒரு கிலோ என்று வைத்தால் கூட 1000 கார்டுகளுக்கு கொடுப்பதற்கு 5 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் கேட்கும் போது முன்னுரிமை அளித்து கோதுமை வழங்குகிறோம் என்றனர்.

கார்டுதாரர்கள் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாகவே கோதுமை விநியோகம் சரியில்லை. முன்பு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு கிலோ கிடைத்தது.

தற்போது மாதக்கணக்காகிறது. கோதுமைக்காக மட்டும் மாதத்தில் 4 நாட்கள் கடைக்கு அலைய வேண்டியுள்ளது. எப்போது கேட்டாலும் பற்றாக்குறை என்று கடைக்காரர்கள் சொல்கின்றனர். கொஞ்சம் வருவதையும் அவர்களே பதுக்கி வெளிச்சந்தையில் விற்கின்றனரா எனத் தெரியவில்லை. அரிசியின் அளவை குறைத்து விட்டு அதற்கு மாற்றாக கோதுமை வழங்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us