sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே ஆக்கிரமிப்புக்கு விடியல் கிடைக்குமா; பல்லாங்குழி ரோடுகளால் பதறும் வாகன ஓட்டிகள்

/

தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே ஆக்கிரமிப்புக்கு விடியல் கிடைக்குமா; பல்லாங்குழி ரோடுகளால் பதறும் வாகன ஓட்டிகள்

தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே ஆக்கிரமிப்புக்கு விடியல் கிடைக்குமா; பல்லாங்குழி ரோடுகளால் பதறும் வாகன ஓட்டிகள்

தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே ஆக்கிரமிப்புக்கு விடியல் கிடைக்குமா; பல்லாங்குழி ரோடுகளால் பதறும் வாகன ஓட்டிகள்

3


ADDED : ஜன 22, 2025 09:14 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:14 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தெற்கு வாசல் -- பெருங்குடி இடையே அவனியாபுரம் வரை ஆக்கிரமிப்புகளால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோடு விரிவாக்கப் பணிகளை தாமதப்படுத்தி வாகன ஓட்டிகளை நெடுஞ்சாலைத் துறையினர் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

மதுரை நகரின் எல்லா ரோடுகளும் வாகன ஓட்டிகளை மட்டுமல்ல, பாதசாரிகளையும் பதைபதைக்க வைக்கிறது. பிரதான ரோடுகள் பள்ளங்களால் பல்லைக்காட்டுகிறதென்றால், அனைத்து வார்டுகளுக்குள்ளும் குடிநீர், பாதாள சாக்கடை என ஏதாவது ஒரு காரணத்திற்காக பத்தடிக்கு குறுக்கு கோடுகளாக ரோட்டை தோண்டி மக்களை பாடாய்படுத்துகின்றனர்.

ஆக்கிரமிப்போ ஆக்கிரமிப்பு


'பீக் ஹவர்'களில் தெற்கு வாசல் முதல் மண்டேலா நகர் வரையான ரோட்டில் செல்வதென்றால் போதும் போதுமென்றாகி விடுகிறது. தெற்குவாசல் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. குறுகலாக உள்ளதால் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

ரோட்டை 21 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் வகையில் மண்டேலா நகர் முதல் பெருங்குடியை தாண்டி வெள்ளக்கல் வரை 3.5 கி.மீ., வரையே விரிவாக்கம் செய்துள்ளனர்.

அதன்பின் மீதியுள்ள 5.1 கி.மீ.,க்கு ஓராண்டுக்கும் மேலாக பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். விமான நிலையம் செல்லும் பிரதான ரோடு என்பதால் தெற்கு வாசல் முதல் வெள்ளக்கல் வரையான பகுதியை விரிவாக்கம் செய்வது அவசியமான ஒன்று. இதற்காக வில்லாபுரம் பகுதியில் சில ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு சரி. அதன்பின் எந்தப் பணியும் நடக்கவில்லை.

இதனால் வில்லாபுரம், அவனியாபுரம் பைபாஸ் ரோடு பகுதிகள் ஆக்கிரமிப்பால் திணறுகிறது. எம்.எம்.சி., காலனி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் இல்லை.

மனஉளைச்சலா இருக்கு


பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த ரோட்டை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதே தவிர பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் இந்த ரோட்டில் செல்லும் பயணிகளுக்கு மனஉளைச்சலாக உள்ளது.

ரோடு விரிவாக்கம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சார்லஸிடம் கேட்டபோது, ''இந்த ரோட்டில் தெற்குவாசல் மேம்பாலம் அருகே கூடுதலாக ஒரு பாலம் அமைய உள்ளது. அப்பாலம் உட்பட விரிவாக்க பகுதிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. அதனை சமர்ப்பித்தபின் அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கும்'' என்றார்.






      Dinamalar
      Follow us